திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் அந்தப் பெண் கத்தாருக்கு வரவேண்டுமெனில் $10,000 பணம் வைத்திருக்க வேண்டும் என்று அவர் கூறி அதனோடு பணத்தை சம்பாதிக்க வழியையும் கூறியுள்ளார்.
துபாயில் பாலியல் சேவை வழங்கும் வேலைக்கு செல்ல வேண்டும் என்று அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். அப்படி சென்றால் மட்டுமே என்னை திருமணம் செய்ய முடியும் என்று கூறியதால் அந்தப் பெண்ணும் அவ்வாறு செய்துள்ளார்.
இதன் மூலம் அர்ஜோயின் குற்றம் அம்பலமானது. இதனை அடுத்து நீதிமன்றத்திற்கு வழக்கு சென்றபோது, அவர் தரப்பு வாதங்களை வழங்குவதற்கு நீதிமன்றம் நிராகரித்து விட்டது. அவருக்கான தண்டனையை ஜூலை மாதம் அறிவிக்கப்படும் என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.
ஒருவரை ஏமாற்றி பாலியல் வேலைகள் செய்யத் தூண்டிய குற்றத்திற்காக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் $100,000 வரை அபராதமும் அதிகபட்சம் ஆறு பிரம்படிகளும் விதிக்கப்படும்.