புத்தாண்டு கொண்டாட்டமாக நேற்றிரவு மூடப்பட்ட சாலைகள்..!!

புத்தாண்டு கொண்டாட்டமாக நேற்றிரவு மூடப்பட்ட சாலைகள்..!!

சிங்கப்பூர்: புத்தாண்டு கவுண்ட்டவுன் தொடங்குவதற்கு முன், நேற்று(31.12.25) இரவு கல்லாங்க் மற்றும் மெரினா விரிகுடா பகுதிகளில் மக்கள் கூட்டம் கணிசமாக அதிகரித்ததைத் தொடர்ந்து,பல பொது இடங்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக தற்காலிகமாக மூடப்பட்டன.

போலீசார் வெளியிட்ட தகவலின்படி, இரவு 11.12 மணியளவில் ஸ்டேடியம் ரிவர்சைடு நடைபாதை மற்றும் நீர் விளையாட்டு மையம் கூட்ட நெரிசல் காரணமாக மூடப்பட்டது. Crowd@Kallang என்ற நிகழ்நேர கண்காணிப்பு வரைபடம், ஸ்டேடியம் ரோர், கடற்கரை கைப்பந்து மைதானங்கள் மற்றும் சிங்கப்பூர் உட்புற மைதானத்திற்கு அருகிலுள்ள ஆற்றங்கரை நடைபாதைகளிலும் மிகுந்த கூட்டம் இருந்ததை காட்டியது.

அதேபோல், மெரினா விரிகுடாவைச் சுற்றியுள்ள பெரும்பாலான கடற்கரைப் பகுதிகளும் பொதுமக்கள் அணுக முடியாத வகையில் மூடப்பட்டன. கிளிஃபோர்ட் சதுக்கம், ஒன் ஃபுல்லர்டன், மெர்லியன் வாட்டர்ஃபிரண்ட், ஜூபிலி பாலம், எஸ்பிளனேட் – பே வாட்டர்ஃபிரண்ட், ஹெலிக்ஸ் பாலம் மற்றும் மெரினா பே சாண்ட்ஸ் சுற்றுவட்டார பகுதிகள் இதில் அடங்கும்.

மெரினா பே சாண்ட்ஸ் பகுதியில் சில நடைபாதைகள் மட்டும் திறந்த நிலையில் இருந்தாலும், அவற்றிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பொதுமக்கள் பாதுகாப்பை முன்னிட்டு, போலீசார் மற்றும் அதிகாரிகள் வழங்கும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK