பரபரப்பு..!!செராங்கூன் நார்த் பள்ளிவாசலில் சந்தேகப் பொட்டலம்..!!!

பரபரப்பு..!!செராங்கூன் நார்த் பள்ளிவாசலில் சந்தேகப் பொட்டலம்..!!!

சிங்கப்பூர்: செராங்கூன் நார்த் பகுதியில் உள்ள அல் இஸ்திகமாஹ் பள்ளிவாசலில் நேற்று(24.09.25) மாலை 5.15 மணி அளவில் ஒரு சந்தேகத்திற்குரிய பொட்டலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் கிடைத்ததும், சிங்கப்பூர் போலீசார் மற்றும் சிவில் பாதுகாப்பு படை (SCDF) உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பள்ளிவாசல் மற்றும் சுற்றுப்பகுதியை பாதுகாப்புக்காக அடைத்தனர்.

பின்னர் வெடிகுண்டு நிபுணர் குழுவினர் அந்தப் பொட்டலத்தை பரிசோதித்து, ஆபத்தான பொருட்கள் எதுவும் இல்லை என்று உறுதிப்படுத்தினர்.

அச்சம்பவத்தின் போது ஒருவருக்கு சுவாச சிரமம் ஏற்பட்டதாகவும், அவர் உடனடியாக செங்காங் பொதுமருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


பின்னர் இரவு 10.00 மணிக்கு நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பியது.

போலீசார், அந்தப் பொட்டலம் எவ்வாறு பள்ளிவாசல் வளாகத்தில் வைக்கப்பட்டது என்பதற்கான விசாரணைகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK