சாலையைக் கடக்கும் போது சிறுமி செய்த செயல்..!! இணையவாசிகளின் பாராட்டைப் பெற்ற வீடியோ..!!
சிங்கப்பூரில் பள்ளிச் சீருடை அணிந்த சிறுமி, பாதசாரிகளின் சாலையைக் கடக்கும்போது, சாலையில் சென்ற வாகனத்தை நிறுத்தி ஓட்டுநருக்கு வணக்கம் தெரிவித்துள்ளார்.
சிறுமியின் இந்த பண்பான செயலானது இணையத்தில் காணொளியாக பதிவேற்றப்பட்டுள்ளது.
அந்த சிறுமியின் செயலுக்காக பல இணையவாசிகள் அந்த சிறுமிக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
sgfollowsall என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட டாஷ் கேம் வீடியோவின் படி, இந்த சம்பவமானது ஏப்ரல் 8-ஆம் தேதி அன்று காலை 7:18 மணி அளவில் நடந்துள்ளது.
இந்த சம்பவம் எந்த இடத்தில் நடந்தது என்று அந்த பதிவில் குறிப்பிடப்படவில்லை.
பாதசாரிகள் சாலையைக் கடப்பதற்காக ஒரு கார், வரிக்குதிரை கடக்கும் இடத்தில் மெதுவாக நிற்பது போன்று அந்த காணொளியில் தெரிகிறது. சிறுமிகளில் ஒருவர் சாலையைக் கடப்பதற்கு முன் காருக்கு முன்னால் நின்று, பின் ஓட்டுநரை நோக்கி திரும்பி , அவருக்கு தலைவணங்கி கையசைத்து விட்டு சாலையைக் கடந்துள்ளார்.
அந்த சிறுமியின் செயல்கள் பாராட்டுக்கள் பெற்றதோடு மட்டுமல்லாமல், வேறு சிலர் அவள் அழகாக இருப்பதாகவும், சிலர் அவள் மிகவும் பண்பானவள் எனவும், அவளது அந்த செயலானது அந்த ஓட்டுநரின் நாளை சிறந்த நாளாக மாற்றி இருக்கும் எனவும் கூறியுள்ளனர்.
அந்த மாணவி அணிந்திருந்த பள்ளிச் சீருடையை வைத்துப் பார்க்கையில், அந்த சிறுமி பார்ட்லி மேல்நிலைப் பள்ளியின் மாணவியாக இருக்கலாம் என்று இணையவாசிகள் இணையத்தில் கருத்துகளைத் தெரிவித்தனர்.