புதிய திட்டம் விவசாயிகளுக்கு நிம்மதி தருமா..?? சிங்கப்பூர் அறிமுகப்படுத்திய புதிய திட்டம்..!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் போக்குவரத்து செலவுகளைக் குறைக்கும் நோக்கில்,புதிய விவசாயிகள் சங்கம் தளவாடப் பகிர்வு முன்னோடித் திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டம் மூலம், விவசாயிகளின் தளவாடத் தேவைகளை ஒருங்கிணைத்து பகிர்ந்து கொள்வதன் மூலம், உள்ளூர் பண்ணை பொருட்களின் விலையில் 10% அல்லது அதற்கும் குறைவாக போக்குவரத்து செலவுகளை குறைப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.
முதற்கட்டமாக, இந்த முயற்சி ஒரு கடல் உணவு நிறுவனத்தில் தொடங்கப்படுகிறது. எதிர்காலத்தில், இது லிம் சூ காங் பகுதியில் உள்ள காய்கறி பண்ணைகளுக்கும் விரிவுபடுத்தப்படும். தற்போது பல மீன் மற்றும் இறால் பண்ணைகள் தங்களது உயிருள்ள கடல் உணவுகளை தனித்தனியாக நகரம் முழுவதும் கொண்டு செல்கின்றன. இது அதிக உழைப்பையும் செலவையும் ஏற்படுத்தி, தயாரிப்பு விலைகளையும் உயர்த்துகிறது.
புதிய திட்டத்தின் கீழ், லிம் சூ காங் மற்றும் லோரோங் ஹாரஸ் ஜெட்டிகளில் இருந்து பகிரப்பட்ட லாரிகள் மூலம் பொருட்களை மையமாக கொண்டு செல்ல முடியும். இது செலவுகளை குறைக்க உதவுகிறது.
மீன்வள வர்த்தகர்கள் சங்கத் தலைவர் சீ வென்கியாங் கூறியதாவது, “தொடக்கத்தில் சில சவால்கள் இருந்தாலும், பண்ணைகளின் அளவும் போக்குவரத்து வசதிகளும் வளர்ந்துவர, அமைப்பு சீராகும். இது எதிர்காலத்தில் விவசாயிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இரட்டைப் பயன் தரும்” என்று கூறினார்.
மேலும், அடுத்த ஆண்டுக்குள் சிங்கப்பூர் விவசாயிகள் சந்தை பிராண்டில் காளான்களையும் சேர்க்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சிறிய காளான் பண்ணைகள் தங்கள் உற்பத்தி அளவை விரிவுபடுத்த முடியும் என்று சங்கம் நம்புகிறது.