எஸ்கலேட்டரில் அதிர்ச்சி தருணம் – உடனடி உதவியால் தப்பிய உயிர்..!

எஸ்கலேட்டரில் அதிர்ச்சி தருணம் – உடனடி உதவியால் தப்பிய உயிர்..!

சிங்கப்பூர்:பாயா லெபார் பகுதியில் உள்ள PLQ வணிக வளாகத்தில் எஸ்கலேட்டரில் சென்றுகொண்டிருந்த ஒருவர் திடீரென சமநிலையை இழந்து பின்னோக்கி விழுந்தார். அதிர்ஷ்டவசமாக, அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக செயல்பட்டு அவரைத் தாங்கிப் பிடித்து பாதுகாப்பாக மீட்டனர்.

இந்தச் சம்பவம் கடந்த புதன்கிழமை மதியம் (11.02.26) நடைபெற்றது. இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் டேவிட் கிங்ராஜ் என்ற பயனர் பகிர்ந்த காணொளியில், அந்த நபர் கைப்பிடியைப் பிடிக்காமல் சென்றதால் சமநிலை இழந்து விழும் காட்சி பதிவாகியுள்ளது.

அருகில் நின்றிருந்த இருவர் அவருக்கு உதவினர். பின்னர் உதவி செய்த பெண் ஒருவர் அவரிடம் கைப்பிடியைப் பிடிக்க நினைவூட்டியதுடன் அடுத்த தளத்திற்குப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றார்.

விழுந்ததில் அந்த நபரின் கால் விரலில் காயம் ஏற்பட்டு இரத்தப்போக்கு ஏற்பட்டது. உடனே மால் பாதுகாப்பு பணியாளர்கள் அழைக்கப்பட்டனர். முதலுதவி பெட்டியுடன் வந்த பாதுகாவலர் காயத்திற்கு சிகிச்சை அளித்தார். அவசர சேவைகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் காயம் பெரிதல்ல என்று உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனைக்கு செல்ல தேவையில்லை என முடிவு செய்யப்பட்டது. பாதுகாப்பு பணியாளர்களும் உதவிய பெண்ணும், காயமடைந்த நபரை வீட்டிற்கு அனுப்ப டாக்ஸி ஏற்பாடு செய்தனர்.

இந்த காணொளி 4,000க்கும் மேற்பட்ட ‘லைக்’குகளைப் பெற்று, உதவிய பொதுமக்களின் மனிதநேயத்தை பலரும் பாராட்டியுள்ளனர். மேலும் இச்சம்பவத்தை பதிவு செய்த நெட்டிசனுக்கும் உதவிய பெண்ணுக்கும் நன்றி தெரிவித்து, காயமடைந்த நபர் விரைவில் குணமடைய வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Follow us on : click here 

 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK