சாங்கி விமானத்தில் பிடிபட்ட பெண்..!! என்ன காரணம்..??
சாங்கி விமான நிலையத்தில் ஒரு முஸ்லிம் பெண் விமான நிலையத்தில் உள்ள கடை ஒன்று வேலை செய்து கொண்டிருந்தபோது அவர் அவர் சில சரும பராமரிப்பு பொருட்களை திருடி உளளார்.
அந்த திருடிய பொருட்களில் டிப்டிக் (Diptyque), டியோர்(Dior), மற்றும் சேனல் (Chanel) என்ற புகழ்பெற்ற நிறுவனங்களின் விலை அதிகம் உள்ள வாசனை திரவியங்கள், சரும பராமரிப்பு பொருட்கள் மற்றும் ஒப்பனை பொருட்கள் ஆகியவை உள்ளது.
மேலும் பணி இடைவேளை நேரத்தில், கரோசல்(Carousel) மூலமாக மற்றும் வாய்மொழி மூலமாக இந்த பொருட்களை அதனுடைய விற்பனை விலையில் இரந்து 50 சதவீதம் குறைத்து விற்பனை செய்துள்ளார்.
கடையில் உள்ள பொருள்களினுடைய இருப்பு குறைவதை கண்காணித்த கடையின் உடைய நிர்வாகி அதனை மேலும் கண்டறிய எடுக்கப்பட்ட நடவடிக்கையின் போது அவர் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.
திருடிய சம்பவம் குறித்து காவல்துறையிடம் கடை உரிமையாளர் புகார் செய்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதிக்கும் மே 22ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் அந்த பெண் குறைந்த பட்சம் 108 தடவை கடைகளில் உள்ள 147 பொருட்களை திருடி உள்ளதாக நீதிமன்ற ஆவணங்கள் மூலம் தெரியவந்தது.
49 வயதான தகேடா பைலின் ஃபுட் டாலர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இவருக்கு மார்ச் 17ஆம் தேதி 7 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.