புதிய விதி அமலுக்கு வந்த நிலையில் சாங்கி விமான நிலையத்தில் 1,2,3 முனையங்களின் பயண நுழைவாயிலில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டது. முனையும் நாளில் பயண புறப்பாட்டு குடிநுழைவு வட்டாரத்திற்கு அப்பால் இந்த சோதனையானது நடத்தப்பட்டது.
பிற்பகல் 3 மணிக்கு நள்ளிரவுக்கும் இடைப்பட்ட வேலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு சாதனங்களைத் தவிர அதிகமாக வைத்திருந்த “பவர் பேங்க்” சாதனத்தை அவர்கள் வைத்திருக்கும் பெட்டிகளில் இருந்து வெளியே எடுத்து விடுமாறு அதிகாரிகள் பயணிகள் இடம் தெரிவித்தனர். உடனே அவைகள் அப்புறப்படுத்தப்பட்டது.
ஏப்ரல் 15 அன்று, இந்த விதி அமலுக்கு வந்த நாளில் மட்டும் 275 விமானங்களில் பயணம் செய்ய தயாராக இருந்தவர்களின் உடைமைகள் சோதிக்கப்பட்டதாக விமான குழுமம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.