சிங்கப்பூர் சாலையில் ஏற்பட்ட பரபரப்பு நிகழ்வு..!!

சிங்கப்பூர் சாலையில் ஏற்பட்ட பரபரப்பு நிகழ்வு..!!

சிங்கப்பூரில் விரைவுச் சாலைகள் அதுவும் குறிப்பாக மிகுந்த நேரங்களில் அவசரகால வாகனங்களைப் பின்தொடர்வதற்காக வாகனங்கள் தங்களது தடங்களை மாற்றுவது ஒன்றும் புதிதல்ல.

ஆனால் இந்த முறை ஒரு வாகன ஓட்டுநர் இதுபோன்று செய்ய முற்படும்போது, அதில் 5 வாகன ஓட்டிகளுக்கு உதவி தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏப்ரல் 14ஆம் தேதி அன்று இரவு 7:10 மணியளவில், 5 கார்கள் சம்பந்தப்பட்ட ஒரு சாலை விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தானது புக்கிட் திமா விரைவுச் சாலைக்கு வெளிவழிக்கு முன்பு, ஆயா ராஜா விரைவுச்சாலையை நோக்கி செல்லும் மத்திய விரைவுச் சாலையில் நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தின் காணொளிகள் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டு பரவி வருகின்றது.

அந்த காணொளிகளில், 4 வழித்தடங்களில் வலப்புறம் உள்ள விரைவுச் சாலையில் போக்குவரத்து காவல்துறையின் சுற்று காவல் வாகனம் என்று அதன் அவசரகால ஒளிரும் விலங்குகளுடன் நிற்பது தெரிகிறது.

சுற்றுக்காவல் முன்னேறிச் செல்லும்போது இரண்டாம் தடத்தில் இருந்த பல கார்கள் முதல் தடத்துக்கு மாறுவது தெரிகிறது. அந்த காணொளியின் அடிப்படையில் மற்ற தடங்களில் போக்குவரத்து சற்று நெரிசலாக இருந்தாலும் வாகனங்கள் சீராகவே செயல்படுவது போல தெரிகிறது.

சுற்றுக்காவல் வாகனத்திற்கு பின்னால் செல்வதற்கு பின் தொடர்ந்து சென்ற வாகனங்களுக்கு முன்னால் குறுக்கிட முயன்ற ஒரு கார் ஓட்டுநர் திடீரென வேக கட்டுப்பாட்டு விசையை அதிகமாக இயக்கியதன் காரணமாக இந்த 5 கார்கள் சம்பந்தப்பட்ட விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 32 வயதான பெண் பயணி ஒருவர் சிகிச்சைக்காக சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறையினரும், சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினரும் (SCDF)தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த விபத்து குறித்த விசாரணையைக் காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

 

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK