சிங்கப்பூர் சென்று மிகவும் எளிய முறையில் டெஸ்ட் அடிப்பதற்கான ஓர் அரிய வாய்ப்பு..!!
தமிழ்நாட்டில் டெஸ்ட் அடிப்பதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்!
சிங்கப்பூர் செல்வதற்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்பொழுது Skilled டெஸ்ட் அடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இது முன்பு போல் இல்லாமல் புதிய விதிமுறைகளை பின்பற்றி டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் செல்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதற்கு முன்பு PCM PERMIT இல் சென்று கம்பெனியின் அனுமதி கடிதம் இருந்தால் டெஸ்ட் அடிக்கலாம் என்று ஒரு சிலர் சிங்கப்பூர் சென்று கொண்டிருந்தனர். ஆனால் அது போல் இல்லாமல் தற்பொழுது இங்கேயே நீங்கள் BCA-வின் அனுமதியுடன் டெஸ்ட் அடிப்பதற்காக சிங்கப்பூர் செல்ல போகிறீர்கள்.
இதற்கு முதலில் என் எஸ் டி சி சர்டிபிகேட் உள்ள ட்ரைனிங் சென்டர்களை தேர்ந்தெடுங்கள். அங்கு சென்று நீங்கள் உங்கள் பயிற்சியை தொடங்க வேண்டும்.
தற்பொழுது நீங்கள் டெஸ்ட் அடித்து செல்வதற்கு TEP PASS அல்லது வேறு எந்த பாசிலும் சிங்கப்பூர் சென்று இருக்க கூடாது என்று டெஸ்ட் இன்ஸ்டிட்யூட்கள் சொல்கிறது. இது காலப்போக்கில் மாறும்.
சிங்கப்பூரிலிருந்து கம்பெனிகள் இங்கு வந்து உங்களை தேர்வு செய்வார்கள். இதில் தேர்வாவதற்கு உங்களுக்கு ஆங்கிலம் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால் அங்கு ஒரு சிலர் தேர்ச்சி பெற தவறுவதால் ஓரளவுக்கு ஆங்கிலம் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்று கம்பெனி எதிர்பார்க்கிறது.
உங்களைத் தேர்வு செய்து விட்டு சென்ற பிறகு, நீங்கள் AEP pass இல் சிங்கப்பூர் செல்வீர்கள். அங்கு சென்று மூன்று மாதத்திற்குள் நீங்கள் டெஸ்ட் அடித்து முடித்து விடலாம். நீங்கள் பெயிலாகும் பட்சத்தில் Retest அடித்துக் கொள்ளலாம்.
இப்பொழுது இந்த புதிய விதிமுறை சிங்கப்பூர் டெஸ்ட் அடிப்பதற்காக பின்பற்றப்படுகிறது. இதில் ஏதேனும் மாற்றம் வந்தால் நிச்சயமாக நாங்கள் தெரியப்படுத்துவோம். இதற்கு இன்ஸ்டிடியூட்டுகள் வாங்கும் தொகை 4 இலிருந்து 5 லட்சம் வரை. உங்களுக்கு என் எஸ் டி சி சர்டிபிகேட் வைத்துள்ள இன்ஸ்டிடியூட்டுகள் தெரியவில்லை என்றால் பின்வரும் எண்களை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.