மேலும் 2 புதிய நீர்மூழ்கி கப்பல்களை பெறும் சிங்கப்பூர் கடற்படை!!
சிங்கப்பூர் கடற்படை மேலும் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெற உள்ளது.அந்த இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்கள் 2034 ஆம் ஆண்டில் சிங்கப்பூரை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்த அறிவிப்பை மார்ச் மாதம் அப்போதிருந்த தற்காப்பு அமைச்சர் Ng Eng Hen அறிவித்திருந்தார்.
தற்போது சிங்கப்பூர் கடற்படை 4 நீர்முழ்கிக் கப்பல்களை வைத்துள்ளது.அதில் முதல் இரு நீர்முழ்கிக் கப்பல்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இயங்கி வருகிறது.
மீதமுள்ள மூன்றாம் ,நான்காம் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஜெர்மனியில் சோதனைகளை முடித்து சிங்கப்பூருக்கு 2028 ஆம் ஆண்டுக்குள் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய நீர்முழ்கிக் கப்பல்கள் ஆழம் குறைந்த வெப்பமண்டல கடற்பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையிலான வீரர்களால் இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.