பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்தி விட்டு தானும் தற்கொலை செய்தவர் நபர் எதனால் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!
யீஷீனில் , ஜூலை 19 Block 334B yishun Street 31 மாலை 5:20 மணி அளவில் 44 வயது ஆடவர் ஒருவர் தமது பக்கத்து வீட்டுக்காரரை கத்தியால் குத்திவிட்டு பிறகு தாமும் தற்கொலை செய்து கொண்டு மாண்டார்.
அவர்கள் ஒரே மாடியில் வசித்தவர்கள் காயமடைந்த 53 வயது ஆடவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார் அவரின் உடல்நிலை ஓரளவுக்கு சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் அங்கு வந்தது முதலே பக்கத்து வீட்டுக்காரர்களுடன் அடிக்கடி வாக்குவாதம் நடந்து வந்ததாக தெரிகிறது.
பக்கத்து வீடுகளை கடந்து செல்லும் போது அதில் இருப்பவர்கள் வேண்டுமென்றே சத்தம் எழுப்புவதும் ஹாரனை சத்தமாக ஒழிப்பதும் என்று தொந்தரவு செய்ததாக மாண்டவரின் மனைவி கூறியுள்ளார்.
இதனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் வேறு வீட்டை பார்த்து வாடகைக்கு சென்று விடலாம் என்று எண்ணிய தாங்கள் ஒரு வீட்டையும் பார்த்து விட்டதாக அந்த பெண் சொன்னார் ஆனால் அதற்குள் இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றார் அவர்.
மாண்டவர் கட்டடத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படுகிறது.