சிங்கப்பூரில் செயல்படாத உள்ளூர் கட்சிகளின் நிலை என்ன? தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்
சிங்கப்பூர்: கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 7ஆம் தேதி) அரசியல் கட்சிகள் குறித்து அரசு வர்த்தமானியில் சங்கங்களின் பதிவேடு ஒரு அறிவிப்பை வெளியிட்டியிருந்தது.
சிங்கப்பூரில் 14 அரசியல் கட்சிகள் இருந்தும் செயல்படுகிறதா? இல்லையா? என்பது பற்றி சந்தேகம் எழுவதாக பொறுப்பான உதவி பதிவாளர் கூறியிருந்தார்.
இந்த 14 கட்சிகளில் 1961 இல் நிறுவப்பட்ட சோசலிஸ்ட் ஃபிரண்ட் என்ற கட்சியும் அடங்கும்.
இந்த 14 உள்ளூர் அரசியல் கட்சிகளும் தொடர்ந்து இருப்பதற்கான ஆதாரங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற அரசாணை உத்தரவு பிறப்பித்துள்ளன.
அறிவிப்பு வெளியிட்டு 3 மாத காலங்களுக்குள் கட்சிகள் தொடர்ந்து செயல்படுகின்றன. என்கிற ஆதாரங்களை உள்ளூர் கட்சிகள் சமர்ப்பிக்கவில்லை எனில் காலக்கெடு முடிந்து விடும்.
பிறகு, இந்த உள்ளூர் கட்சிகள் செயலிழந்ததாக பதிவாளர் வர்த்தமானியில் அறிவிப்பை வெளியிடுவார் என கூறப்பட்டிருக்கிறது.