ஏர் இந்தியா விமான விபத்து!! பயணித்தவர்களில் ஒருவர் மட்டும் உயிர் பிழைப்பு!!
இந்தியாவில் உள்ள அகமதாபாத்தில் 242 பேருடன் லண்டனுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.அந்த விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த துயரச் சம்பவத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் உயிரிழந்து விட்டதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.ஒருவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளதாகவும் அவர் பிரிட்டிஷ் நாட்டவரான ஒரு பயணி என்றும் தெரிவித்தது.
அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.உயிர் பிழைத்த பயணியின் பெயர் விஸ்வஷ்குமார் ரமேஷ்.அவர் emergency exit வழியாக கீழே குதித்து உயிர் பிழைத்ததாக கூறப்படுகிறது.