கல்வி அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு ..!! யாருக்காக..??

கல்வி அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு ..!! யாருக்காக..??

சிங்கப்பூரில் கல்வி அமைச்சகம் நேற்று (மார்ச் 16) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கல்வி அமைச்சகம் கடைசியாக 2022 ஆம் ஆண்டு ஊழியர்களின் சம்பளங்களை மறுபரிசீலனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பள உயர்வானது 36,000 ஊழியர்களுக்கு வழங்கபட உள்ளது என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் கீழ்  அக்டோபர் மாதத்தில் இருந்து 2 முதல் 9 சதவீதம் வரையில் ஆசிரியர்கள் சம்பள உயர்வை பெற உள்ளனர்.

ஏறத்தாழ 33,000 கல்வி அதிகாரிகளுக்கும், 1,700 உதவி கல்வியாளர்களுக்கும், 1,100 மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கும் இந்த சம்பள உயர்வானது அளிக்கப்பட உள்ளது.

சம்பள உயர்வு குறித்து கல்வி அமைச்சர் டெஸ்மெண்ட் லீ கூறியதாவது:
ஆசிரியர்கள் கல்வி அமைப்பில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் ,சம்பள உயர்வுகளைத் தாண்டி புதியவற்றை கற்றுக்கொள்ளவும் , அதை மேம்படுத்தவும் கல்வி அமைச்சகமானது ஆசிரியர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்கும் என்றும் கூறியுள்ளார்.

மேலும்  சிறந்த ஆசிரியர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கும், அவர்களை தக்க வைத்துக் கொள்வதற்கும் இந்த புதிய முயற்சியானது எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து மேலும் சிலர் கூறிய கருத்துக்கள்:

1.நாடாளுமன்ற குழு தலைவர் டேரல் டேவிட் இந்த சம்பள மறுசீலனை ஆனது கல்வியாளர்களுக்கு தகுந்த நேரத்தில் கிடைத்திருப்பதாக கூறியுள்ளார்.

2.சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர் தொழிற்சங்கத்தின் தலைவரான தனபால் குமார் இந்த முயற்சியானது முக்கியமான ஒன்று என்றும் ,மேலும் இது ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களை ஊக்கப்படுத்த உதவும் என்றும் கூறியுள்ளார்.

3.சிங்கப்பூர் ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மை திருமன் இந்த சம்பள மாற்றத்தை ஆசிரியர்கள் சங்கம் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

 

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK