சிங்கப்பூரில் இயங்கிய பழமையான கடை மூட உள்ளதாக தகவல் ..!!

சிங்கப்பூரில் இயங்கிய பழமையான கடை மூட உள்ளதாக தகவல் ..!!

சிங்கப்பூரில் 1948 ஆம் ஆண்டு இந்த கடையானது ஹாஜி நஸ்ரின் என்பவரால் முதன்முதலாக நிறுவப்பட்டது. கம்போங் கிளாம் என்ற வட்டாரத்தில் கந்தஹார் தெருவில் இந்த கடை அமைந்துள்ளது.

சிங்கப்பூரில் இயங்கி வருகின்ற மிகப் பழமையான நாசி பாடாங் என்று கூறப்படும் வாரூங் நாசி பரியமான் மூடப்பட உள்ளது என்பதையும் கடை உரிமையாளர்கள் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளனர்.

இந்த மாதம்(ஜனவரி) 31 ஆம் தேதி வரை கடை செயல்படும் என்பதையும் கடை உரிமையாளர் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் CNA வெளியிட்ட செய்தியின் படி, கம்போங் கிளாம் வட்டாரத்தில் அமைந்துள்ள பல கடைகளின் வாடகை ஆனது பல மடங்கு உயர்ந்துள்ளதாக தெரியவந்தது.

அதில் சில கடைகளின் வாடகை மதிப்பானது சுமார் 3000-10,000 வரை வெள்ளி அதிகரித்ததாக தெரியவந்தது.

மிக வேகமாக வாடகை உயர்ந்த வருவதாக கடைக்காரர்கள் தெரிவித்தனர்.

ஆனால் தற்போது மூட உள்ள நாசி பாடாங் கடையை மூட முடிவு எடுப்பது குறித்து காரணங்கள் எதுவும் கூறவில்லை.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK