சிங்கப்பூரில் குத்தகை நீட்டிப்பு..!!! எதற்கு? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்

சிங்கப்பூரில் குத்தகை நீட்டிப்பு..!!! எதற்கு? என தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்

சிங்கப்பூர்: மலேசியாவின் விவசாயம் மற்றும் உணவு பொருள் அமைப்பில் பாசில் பாஞ்சாங் பழம் மற்றும் காய்கறி மொத்த விற்பனை மையம் ஜூரோங் மீன்பிடி துறைமுகம் ஆகியவை மொத்த விற்பனை மையங்களாக உள்ளன.

நாடு முழுவதும் உள்ள பல்பொருள் அங்காடிகள் சந்தைகள் உணவகங்கள் மற்றும் உணவு நிறுவனங்களுக்கு உணவு வழங்குகின்றன என்று உணவு நிறுவனம் இன்று (29ஆம் தேதி) ஒரு செய்தி குறிப்பில் வெளியிட்டது.

நாட்டின் மிகப்பெரிய பழம் காய்கறி மற்றும் உலர் பொருட்கள் மொத்த விற்பனை மையமாக பாசிர் பஞ்ச பழம் மற்றும் காய்கறி மொத்த விற்பனை மையத்தின் தற்போதைய குத்தகை 2026 இல் முடிய உள்ளது.

நாட்டின் ஒரே மீன்பிடி துறைமுகமான ஜுரோங் மீன்பிடி துறைமுகத்தின் குத்தகையும் 2030ல் முடிய உள்ளது. இரண்டு இடங்களுக்கான குத்தகைகளை 2040 வரை நீட்டிக்க உணவு நிறுவனம் தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது.

ஜுரோங் மீன்பிடி துறைமுகத்தின் குத்தகையை நீட்டிப்பது திட்டமிடல் முதலீடு மற்றும் மேம்படுத்தல் ஆகியவற்றில் குத்தகைதாரர்களின் நம்பிக்கை அதிகரிக்கும் என்று உணவு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாசிர் பஞ்சாங் பழம் மற்றும் காய்கறி மொத்த விற்பனை மையத்தின் குத்தகையை நீடிக்க மொத்த விற்பனை மையம் 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அனைத்து தீ பாதுகாப்பு இணக்கமின்மை சிக்கல் களையும் சரி செய்து முடிக்க வேண்டும்.

முக்கிய உணவு விநியோக முனைகளை வலுப்படுத்துதல் இறக்குமதி ஆதாரங்களை பல்வகைப்படுத்துதல் மற்றும் நீண்ட கால நிகழ்ச்சி தன்மை கொண்ட வேளாண் உணவு வர்த்தக அமைப்பை உருவாக்குதல் மூலம் சிங்கப்பூரின் உணவு விநியோகத்தின் நிலைத்தன்மை மற்றும் நீர் தன்மையை உறுதி செய்வதற்கு உணவு நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இரண்டு இடங்களிலும் குத்தகைகளை நீட்டிப்பது உணவு நிறுவனம் மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் சிங்கப்பூரின் மேலாண் உணவு வர்த்தகத்தை ஆதரிக்கும் விநியோக சங்கிலியை மேலும் வலுப்படுத்த உதவும்.

சிங்கப்பூருக்கும் அதன் மக்களுக்கும் பாதுகாப்பான உணவு தொடர்ந்து வழங்கப்படுவதை உறுதி செய்வது ஒரு முக்கிய முன்னுரிமை என்று நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் மூத்த துணைய அமைச்சர் ஸாக்கி முகமது வலியுறுத்தியுள்ளார்.

சிங்கப்பூரின் உணவு விநியோக சங்கிலியின் மேல் தன்மையை மேம்படுத்துவதற்கு இந்த வசதிகளை மேம்படுத்துதல் புதுப்பித்தல் மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைத்தல் ஆகியவை முக்கியமானவை எனவும் கூறியுள்ளார்.

இந்த வசதிகளில் செயல்படும் குத்தகைதாரர்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது முக்கியமானது.

கட்டாயத்தை பாதுகாப்பு தேவைகளுக்கு இணங்க பாசிர் பஞ்சாங் பழம் மற்றும் காய்கறி மொத்த விற்பனை மையத்தின் பழுது பர்க்கும் பணியை முடிக்க வேண்டியது அவசியமாகும்.

பழுது பார்க்கும் காலத்தில் இது சில சிரமங்களை ஏற்படுத்த கூடும் என்றாலும் உணவு நிறுவனம் அனைத்து தொடர்புடைய தரப்பினருடன் நெருக்கமாக பணியாற்றி குறைந்தபட்ச இடையூறுகளுடன் வணிக நடவடிக்கைகளை தொடர்வதை உறுதி செய்ய தேவையான உதவிகள் வழங்கப்படும்.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan