சிங்கப்பூர்: உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக விளங்கும் சிங்கப்பூர் சர்வதேச பாதுகாப்பு சூழல் பெருகிய முறையில் நிலையற்றதாகி வருகிறது.
சிக்கலான மற்றும் வளர்ந்து வரும் இடையூறுகளை சமாளிப்பதற்காக சிங்கப்பூர் தனது எதிர்வினை வழிமுறைகளை தொடர்ந்து வலுப்படுத்தி கொண்டே இருக்கும். மேலும் சட்டங்களை வலுப்படுத்தியும் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை தீவிரமாக மேம்படுத்துவதன் மூலமாக பல இடையூறுகளை சமாளித்து திறனை மேம்படுத்த உதவும் என உள்துறை அமைச்சர் திரு சண்முகம் கூறியுள்ளார்.
சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் கே. சண்முகம் அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையின் இணைப்பில் உள்ள அடுத்த முன்னுரிமைகள் குறித்து வெளியிட்டுள்ளார்.
குற்றவியல் சட்டம், சாலை போக்குவரத்து சட்டம் மற்றும் வெளிநாட்டு தலையீடு தடுப்புச் சட்டம் போன்றவற்றில் புதிய திருத்தங்களை கொண்டு வந்து உள்துறை அமைச்சகம் புதிய மசோதாவை உருவாக்கியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்களில் பெரும் அளவிலான முதலீடு செய்ய உள்துறை குழுவானது உள்துறை தொழில் நுட்பம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
உலகின் பாதுகாப்பான நாடுகளில் பன்னிரண்டாவது முறையாக சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது என்பதை குறித்து உள்துறை அமைச்சகமானது முத்திரை குழுவின் மீது பொதுமக்களின் நம்பிக்கை தொடர்ந்து வளர்ந்து வருவதாகவும் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.