சிங்கப்பூர்-தென்கொரியா உறவில் புதிய அத்தியாயம்..!!

சிங்கப்பூர்-தென்கொரியா உறவில் புதிய அத்தியாயம்..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் இன்று (29.10.25) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தென் கொரியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டு, அங்குள்ள APEC தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

இது அவர் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு தென் கொரியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணமாகும். இவ்வாண்டு சிங்கப்பூருக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதும் இந்த பயணத்தின் முக்கியத்துவத்தை அதிகரிக்கிறது.

தென் கொரிய தலைநகர் சியோலில், பிரதமர் லாரன்ஸ் வோங், தென் கொரிய அதிபர் லீ ஜே-மியுங்கை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் மூலோபாய கூட்டாண்மையை முன்னேற்றவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து கியோங்ஜுவில் நடைபெறும் APEC தலைவர்கள் உச்சிமாநாட்டில் அவர் கலந்து கொண்டு, மாநாட்டில் பங்கேற்கும் பிற பொருளாதார நாடுகளின் தலைவர்களுடனும் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்த உள்ளார்.

இந்த சந்திப்புகள் சிங்கப்பூரின் பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தவும், புதிய வணிக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK