சிங்கப்பூர் : மாண்டாய் வனவிலங்கு சரணாலயத்தில் நடந்த துயர சம்பவம்!!
சிங்கப்பூர்: Berani எனப்படும் எறும்புத்தின்னி தோல் பிரச்சனையால் அவதியுற்று இறந்த துயரச் செய்தியை மண்டாய் வனவிலங்கு குழுமம் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது.
சிங்கப்பூரின் விலங்குகள் சரணாலயத்தில் பலரால் நான்கு அறிந்திருந்த Sunda Pangolin என்கின்ற எறும்புத்தின்னி 2018இல் முதன்முதலாக எலும்பு அறுவை சிகிச்சையை மேற்கொண்டு வரலாறு படைத்த விலங்காகும்.
Berani என்பதற்கு மலாய் மொழியில் துணிச்சல் என்று பொருள். இந்த வார்த்தைக்கு ஏற்றார் போல் வாழ்ந்துள்ளது எனவும், பிரியாவிடை அளிப்பதில் வருந்துவதாக தெரிவித்துள்ளனர்.
அரிதாக காணப்படும் இந்த எறும்பு திண்ணிகளை பாதுகாப்பதற்கு மேலும் பல முயற்சிகள் எடுப்பதற்காக குழு அமைத்து கண்காணிக்கப்படும் என கூறியுள்ளது.