த.வெ.க தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்பு..!!

த.வெ.க தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்பு..!!

சென்னையில் தவெக தலைவர் விஜய் அவர்கள் சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

சட்டமன்றத் தேர்தலில் சென்னையில் உள்ள பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் அவரது வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி பதட்ட நிலையை ஏற்படுத்தி உள்ளது.

காரணம் என்னவென்றால் முரண்பட்ட தகவலை குறிப்பிட்டதால் அவரது வேட்பு மனுக்கள் நிராகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆனால் விஜய் இது குறித்து கூறியதாவது:
2025 இல் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கு நிலுவையில் உள்ளதாக திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

முதன் முதலில் பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் அவர் மீது எந்த வழக்கும் இல்லை என குறிப்பிட்டு இருந்தார்.

ஒரே வேட்பாளர் இரு வெவ்வேறு தொகுதிகளில் வேட்பு அணிகள் தாக்கல் செய்த நிகழ்வு முரண்பட்ட தகவலாக உள்ளது என இது மூலமாக விஜய்க்கு சிக்கலை ஏற்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த காரணத்திற்காக அவரது வேட்பு மனு நிராகரிக்கப்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் தவெக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வேட்புமனு தாக்கல் வரும் 6 ஆம் தேதி தான் முடிவடையும் என்பதால் அதற்குள் புதிய திருத்தப்பட்ட பிரமாண பத்திரத்தை விஜய் தாக்கல் செய்வார் என்ற எதிர்பார்ப்பை எழுந்துள்ளது.

வேட்பு மனு மறுபரிசீலனை ஆனது ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெறும். இதன் பிறகு விஜயின் மனுக்கள் ஏற்கப்படுமா? என்பதன் தகவல் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK