கடந்த ஏப்ரல் மாதத்தில் 1 கோடியே 11 லட்சத்து 96 ஆயிரத்து 170 லட்டுகள் விற்பனையாகி இருந்தன. இது மே மாதத்தில் 1 கோடியே 21 லட்சத்து 35 ஆயிரத்து 528 லட்டுகளாக உயர்ந்தன.
தொடர்ந்து பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கடந்த மாதம் (ஜூன்) 1 கோடியே 26 லட்சத்து 81,805 லட்டுகள் விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களுடன் ஒப்பீடு கையில் ஜூன் மாதத்தில் லட்டு விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. ஒப்பீட்டு அளவில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 1 கோடியே 19 லட்சத்து 21 ஆயிரத்து 353 லட்டுகளும் கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஒரு கோடியே 19 லட்சத்து 21,353 லட்டுகளும் விற்பனையாகி இருந்தன.
இதன் மூலம் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை விட இந்த ஆண்டு ஜூன் மாதம் 7 லட்சத்து 59 ஆயிரத்து 452 லட்டுகள் கூடுதலாக விற்பனையாகி 6.37 விழுக்காடு வளர்ச்சி பதிவாகியுள்ளது.
அதேபோல் 2024 ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 24 லட்சத்து 17 ஆயிரத்து 441 லட்டுகள் அதிகமாக விற்பனையாகி 23.5 விழுக்காடு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி புனிதமான ஸ்ரீவாரி லட்டு பிரசாதத்தை பெற்றுச்செல்லும் வகையில் தேவைக்கேற்ப லட்டு உற்பத்தி மற்றும் விநியோகம் செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.