தியோங் பாருவில் திடீரென்று கேட்ட பயங்கர சத்தம்..!!!20 வயது இளைஞர் கைது..!!
சிங்கப்பூர்: தியோங் பாரு, கிம் தியென் சாலை, பிளாக் 131A-இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாகன நிறுத்துமிடத்தில் சட்டவிரோதமாக பட்டாசு வெடித்ததாகக் கூறி, 20 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (26.10.25) இரவு 10.30 மணியளவில் அந்தப் பகுதியில் யாரோ பட்டாசு வெடிப்பதாக தகவல் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.