சிங்கப்பூர் கொள்ளை வழக்கில் பிடிபட்ட 3 பேர்..!! விரைந்து செயல்பட்ட காவல்துறை..!!

சிங்கப்பூர் கொள்ளை வழக்கில் பிடிபட்ட 3 பேர்..!! விரைந்து செயல்பட்ட காவல்துறை..!!

சிங்கப்பூரில் ரங்கூன் சாலையில் வீட்டிற்குள் நுழைந்துக் கொள்ளை அடிக்க முயன்ற சந்தேகத்தின் பேரில் 3 இளைஞர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது.

சந்தேகப்படுபவர்கள் பிறருக்கு கத்தியால் காயம் ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படுகிறார்கள். இந்த தகவல் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் காவல்துறை விரைந்து செயல்பட்டு அவர்களைக் கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 22 வயதிற்கும் 23 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் .

ஏப்ரல் 10 – ஆம் தேதி இரவு 11:25 மணி அளவில் ஆயுதம் ஏந்தி வீடு புகுந்து கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளனர். அவர்கள் நுழைந்த வீட்டிற்குள் 4 பேர் இருந்ததாகவும், அதில் 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் சிங்கப்பூர் காவல்துறை நேற்று(ஏப்ரல் 13) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாவது: அந்த 3 இளைஞர்களும் குடியிருப்புப் பகுதியில் முன்கூட்டியே சந்திக்க ஏற்பாடு செய்துள்ளனர். வீட்டின் உள்ளே நுழைந்ததும் அங்கிருந்த 4 பேரையும் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.

அவர்களின் மிரட்டலுக்கு பயந்து, பாதிக்கப்பட்டவர்கள் கொள்ளையடிக்க வந்தவர்களுக்கு $16,300 பணமாகவும், ஒரு தங்க நெக்லஸ் மற்றும் ஒரு தங்க வளையல் ஆகியவற்றை கொடுத்துள்ளனர்.

அவர்களிடம் அனைத்தையும் பெற்றுக் கொண்டு அந்த 3 கொள்ளையர்களும் சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றுள்ளனர்.

மத்திய காவல் நிலையம் மற்றும் காவல் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அந்த 3 பேரையும் ஏப்ரல் 11- ஆம் தேதி அன்று மார்சிலிங் டிரைவில் கைது செய்தனர்.

அவர்களை கைது செய்யும் பொழுது அவர்கள் பயன்படுத்தியக் கத்தியையும் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.

இன்று (ஏப்ரல் 13) அந்த 3 இளைஞர்கள் மீதும் ஆயுதமேந்தி கொள்ளை மற்றும் காயம் ஏற்படுத்தியதற்காக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட உள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டால், அவர்களுக்கு 5 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், குறைந்தபட்சம் 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

இது போன்ற சம்பவங்களைப் பொதுமக்கள் எதிர்கொண்டால் அமைதியாக இருக்குமாறும், குற்றவாளிகளின் தோற்றம் மற்றும் தனித்துவமான அடையாளங்களைக் கவனித்து வைத்து, காவல்துறையிடம் உடனடியாகத் தெரிவிக்குமாறும் காவல்துறை பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளது.

 

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK