சிங்கப்பூர் மக்களுக்கு அரசு அறிவித்த மகிழ்ச்சியான செய்தி..!!
சிங்கப்பூர்: அன்மேஹியா மலை மருத்துவமனையின் 65 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் ஓங் யே குங் இன்று (ஏப்ரல் 9) பங்கேற்றார்.
இந்த விழா கொண்டாட்டத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் மக்களுக்கு குறைந்த செலவிலான தனியார் சுகாதார பராமரிப்பிற்கான ஒரு மற்றொரு வாய்ப்பாக லாப நோக்கமற்ற தனியார் மருத்துவமனை ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். இதற்காக கிழக்கு சிங்கப்பூரில் நிலத்தை ஒதுக்குவதாக கூறப்பட்டுள்ளது.
புதிய மருத்துவமனையில் 300 முதல் 400 படுக்கைகள் இருக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த வருடத்தின் இரண்டாம் பாதியில் இதற்கான ஒப்பந்த புள்ளியை நடத்துவதற்கு அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கின்றனர்.
இது குறித்து அமைச்சர் கூறியது, “இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் நமது நாட்டில் ஒரு தனியார் மருத்துவமனை கட்டுவதற்காக நிலம் வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளில் இந்த முடிவு முதல் முறையாக எடுக்கப்பட்டது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
குறைந்த செலவுக்கான தீர்வுகளை வழங்குவதற்காக சுகாதார மற்றும் நலத்துறை அமைச்சகம் அதன் ஒப்பந்த ஆவணங்களில் சில நிபந்தனைகளை சேர்ப்பதாக தெரியவந்துள்ளது.
மருத்துவமனை கட்டணத் தொகைகளுக்கு உச்சவரம்பு நிர்ணயிப்பது, அதனை சந்தையின் ஒரு குறிப்பிட்ட சதவீதத்திற்குள் வைத்திருப்பது, மேலும் அதில் சாதிக்கும் செலுத்தாமல் இருப்பதை உறுதி செய்வது என இந்த நிபந்தனைகள் குறிப்பிடப்படும்.
இதற்காக அதிகாரிகள் ஒரு நிலையான விளைநிலையை ஒப்பந்த புள்ளி மாதிரியே பின்பற்றவும் திட்டமிட்டுள்ளனர். அதன்படி ஏலதாரர்கள் இடையேயான போட்டியானது ஒப்பந்த விலைகளின் அடிப்படையில் அல்லாது பராமரிப்பு மாதிரிகள் பணியாளர்களை ஆட்சி ஏற்ப செலவு திறன் மற்றும் மேம்படுத்தும் முறைகள் மலிவு விலையில் சுகாதார பாதுகாப்பு வழங்குவதற்கான உறுதிப்பாடுகள் மற்றும் கொள்கைகள் போன்ற பிற பண்பு சார்பாக காரணிகளின் அடிப்படையிலும் இவை அமையும் என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
விவாதம் செய்யப்பட வேண்டிய சில முக்கிய விஷயங்கள் இன்னும் இருப்பதாகவும் இந்த ஆண்டு இரண்டாம் பாதியில் அது முடிவுக்கு வரும் என்றும் அதன் பிறகு ஏலம் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
சுகாதார மற்றும் மனித சேவைகள் துறை இந்த லாப நோக்கமற்ற தனியார் மருத்துவமனை திட்டம் தொடர்பாக பல தரப்பினருடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு சாத்தியமான இயக்குனர்கள் தாராள நன்கொடையை வழங்குபவர்கள் மற்றும் கொடையாளர்களிடமிருந்து அவர்களுடைய நேர்மறையான கருத்துக்களை பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை ஒரு உயர்தர திட்டமாக உருவாக்கி மேலும் பொது சுகாதாரத் துறைக்கு அப்பாற்பட்டு பல தரப்பினரையும் ஈர்ப்பதாகவும் இருக்கும். சுகாதார பாதுகாப்பு சூழ் அமைப்பை இதன் மூலம் வலுப்படுத்த முடியும் என நம்புவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2024 பிப்ரவரியில் ஒரு நாடாளுமன்ற கேள்விக்கு அமைச்சர் கூறிய பதில்: அந்தக் காலத்தில் சிங்கப்பூரில் மவுண்ட் அன்வேனியா மருத்துவமனை என்ற ஒரே ஒரு லாப நோக்கம் இல்லாத தனியார் மருத்துவமனை மட்டுமே இருந்ததாக கூறியுள்ளார்.
பொதுமக்களுக்கு மேலும் கூடுதல் வாய்ப்புகளை வழங்கவும் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் காத்திருப்பு நேரங்களை குறைப்பதற்காகவும் அதே பட்சத்தில் அரசு மருத்துவமனைகளின் பணி சுமைகளை குறைப்பதற்காகவும் மற்றொரு தனியார் அவசர மருத்துவமனையை நிறுவ வேண்டும் என்று அதிகாரிகள் உத்தேசித்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்.