சிங்கப்பூரின் ஹவ்காங் பகுதியில் ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று அதிகாலை நேரத்தில் ஒரு கொடூரமான கார் விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த விபத்தில் 38 வயதான ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சிங்கப்பூர் காவல்துறையினர் மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புடையினர் (SCDF) இந்த விபத்து குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
பிறகு காரிலிருந்து மீட்கப்பட்டவரை பரிசோதித்த மருத்துவ குழுவினர் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தின் போது காரில் வேறு பயணிகள் யாரும் இல்லை என்றும், இதில் வேறு வாகனங்கள்எதுவும் சம்பந்தப்படவில்லை என்றும் முதற்கட்ட சாரணையில் தெரியவந்துள்ளது.