சிங்கப்பூர் ஆடி மையத்தில் வெடிப்பு..!! சட்டத்தின் பிடியில் பிரீமியம் நிறுவனம்…!!

சிங்கப்பூர் ஆடி மையத்தில் வெடிப்பு..!! சட்டத்தின் பிடியில் பிரீமியம் நிறுவனம்...!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் மார்ச் 2023 வுமேய் ஆடி சர்வீஸ் மையத்தில் ஏற்பட்ட வெடிப்பிற்கு காரணமாக, லிஃப்ட் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி பயன்படுத்தியதற்காக பிரீமியம் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இச்ம்பவத்தின் போது 100 பேர் அவசரமாக வெளியேற்றப்பட்டு, ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

வழக்குப்பதிவின்படி நிறுவனம் 55, உபி ரோடு 1-இல் ஹைட்ராலிக் லிஃப்ட் மற்றும் மூடப்பட்ட இயந்திர அறையை பாதுகாப்பில்லாத முறையில் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

மேலும், கழிவு எண்ணெய் தொட்டியின் அருகே லிஃப்ட் மோட்டார் இயங்கியது வெடிப்புக்கு காரணமாக இருப்பதாக விசாரணையில் வெளியாகியுள்ளது.

CNA-வின் தகவலின்படி, நிறுவனத்தால் கட்டிட பராமரிப்பு மற்றும் லிஃப்ட் இயக்க விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன.

சட்டப்படி இத்தகைய குற்றத்திற்கு 12 மாதங்கள் சிறை அல்லது S$20,000 வரை அபராதம் விதிக்கப்படும்.ஆனால், இது ஒரு நிறுவனம் என்பதால் குற்றம் உறுதியானால் அபராதம் மட்டுமே விதிக்கப்படும்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan