அல்பாட்ராஸ் காப்பகம்-மாணவர்களுக்கு நேரடி கற்றல் அனுபவம்..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரின் அல்பாட்ராஸ் ஆவணக் காப்பகத்தில் உள்ள கண்ணோட்டங்கள் மற்றும் அசல் பொருட்கள், உள்ளூர் மாணவர்களின் வயதுக்கேற்ற பாடத்திட்டங்களிலும் கற்பித்தல் வளங்களிலும் சேர்க்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் லீ யி ஷியான் தெரிவித்தார்.
இதன் மூலம் மாணவர்கள் விசாரணை அடிப்படையிலான கற்றலை மேம்படுத்தி, வெவ்வேறு பார்வைகளைப் புரிந்துகொள்ளும் திறனை வளர்க்க முடியும்.
மேலும், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவை பிரிக்கும் பிரச்சினைகளில் அவர்களுக்கு விரிவான தீர்வுகளை வழங்க உதவும் என்று ஜூரோங் கிழக்கு-புக்கிட் பாத்தோக் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கோ டெக் சாயின் கேள்விக்கு கல்வி அமைச்சர் லீ யி ஷியான் நேற்று (12.01.26) எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
ஆசிரியர்களுக்கு வழிகாட்டல் அளிக்க அதிகாரிகள், பாடத்திட்டங்களுக்கான கற்பித்தல் வழிகாட்டுதல்களை புதுப்பிப்பதும், வரலாற்றுத் தரவுகள் மற்றும் சான்றுகளை கையாளும் திறனை மேம்படுத்தும் பட்டறைகளை நடத்துவதும் செய்து வருகின்றனர்.