சிங்கப்பூர்:கிளெமென்டி,பிளாக் 448 இல் உள்ள ஒரு கரும்பு ஜூஸ் கடையில் பெண் ஊழியரின் வலது கை இயந்திரத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்றிரவு 6:40 மணியளவில் நடந்துள்ளது.
விபத்து நடந்த போது அருகிலுள்ள மற்ற கடை விற்பனையாளர்கள் அலறல் சத்தம் கேட்டதாகவும் ஆரம்பத்தில் கரப்பான் பூச்சி அல்லது எலியை தேடுகிறாரோ என்று நினைத்தனர்.பின்பு சோதனை செய்தபோது தான் உண்மையில் ஊழியர் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு உடனடியாக முதல் தொகுதி சிவில் பாதுகாப்புப் படையினர் வந்தனர். சுமார் பத்து நிமிடங்களுக்குப் பிறகு யாரையும் மீட்க முடியாது என்பதை உணர்ந்தனர். பின்னர் இரண்டாவது தொகுதி சிவில் பாதுகாப்புப் படையினர் வந்து ஒரு சுற்றி வளைப்பை அமைத்து, பகுதியை விரிவுபடுத்தத் தொடங்கினர்.
பின்னர் தீயணைப்பு வீரர்கள் இயந்திரத்தை அகற்றி இரவு சுமார் 8:30 மணி அளவில் ஊழியரை வெற்றிகரமாக மீட்டனர்.