பியூப்லா மாநிலம், தெப்ப்போக்கா நகரின் சான் ஜுவான் நெக்ரேட் டே பகுதியில் ஜூன் 4-ம் தேதி காலை சுமார் 10 மணியளவில் இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் மாபெரும் வெடிப்பு சத்தம் ஏற்பட்டதாகவும் அதன் அதிர்வலைகள் நகரின் பல பகுதிகளை பாதித்ததாகவும் அருகில் இருந்த குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிமிடங்களுக்குப் பிறகு வானத்தில் ஒரு மாபெரும் தீப்பிழம்பு ஏற்பட்டுள்ளது. அது பல்வேறு இடங்களில் தெளிவாகத் தெரிந்தது.
இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். குடிமைப் பாதுகாப்புப் படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்ளூர் காவல்துறை மற்றும் பல்வேறு அரசு முகமைகள் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கும் மக்கள் அப்பகுதிக்கு வராமல் தடுப்பதற்கும் அதை சுற்றி வளைப்பதற்கு உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
மேலும் வெடிப்புகள் ஏற்படக்கூடும் அல்லது தீ மேலும் பரவி விடும் என்ற பயத்தில் அதிகாரிகள் அருகில் உள்ள குடியிருப்பாளர்களை வெளியேற்றினர். மற்றும் தீயணைப்பு நடவடிக்கைகளில் கூடுதல் தீயணைப்பு வீரர்களையும் தண்ணீர் லாரிகளையும் அண்டை பகுதியில் இருந்து உதவிக்கோரி மீட்பு பணியைத் தொடர்ந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பதை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. மேலும் வெடிப்புக்கான காரணம் மற்றும் விபத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.