இது குறித்த அன்று காலை 10:30 மணி அளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு (SCDF) தகவல் தெரிவிக்கப்பட்டது.
கே கே மகளிர் குழந்தைகள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். கிகிச்சைப் பெற்ற சிறுவன் தற்போது வீட்டில் ஓய்வெடுப்பதாகவும் SCDF கூறியுள்ளது.
டிக் டாக் சமூக ஊடகத்தில் பரவி வரும் காணொளிகளில் பெயர் பலகை சரிந்து விழுந்ததில் ஏற்பட்ட இடிப்பாடுகள் நுழைவாயில் முழுமையாக மூடி இருப்பது தெரிகிறது.
இந்த எதிர்பாராத சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்பதாகவும், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு வணிக வளாக நிர்வாகத்துடன் இணைந்து உடனடியாக உதவிகள் வழங்கப்பட்டது எனவும் சம்பந்தப்பட்ட உணவு மையத்தின் செய்த தொடர்பாளர் கூறியுள்ளார்.