சிங்கப்பூர் உணவகத்தில் $4,095 கொள்ளை..!! 32 மணி நேரத்தில் சிக்கிய 37 வயது நபர்.!

சிங்கப்பூர் உணவகத்தில் $4,095 கொள்ளை..!! 32 மணி நேரத்தில் சிக்கிய 37 வயது நபர்.!

சிங்கப்பூர் டான்ஜோங் பகார் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிற்குள் புகுந்து $4,000-க்கும் மேல் திருடிய 37 வயது நபர் வருவரை சிங்கப்பூர் காவல்துறையினர் புகார் அளிக்கப்பட்ட 32 மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர்.

பெக்சியா தெருவில் உள்ள உணவகத்தின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த அந்த நபர், அங்கிருந்த $4,095 ரொக்கப் பணத்தை திருடி சென்றுள்ளார்.

இது குறித்து கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று காவல்துறையினருக்கு காலை 10:20 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மத்திய மற்றும் உட்லண்ட்ஸ் காவல்துறை பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்கள் மற்றும் காவல்துறை கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளியை அடையாளம் கண்டனர்.

பின்னர் புகார் அளிக்கப்பட்ட 32 மணி நேரத்திற்குள் சந்தேக நபர் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணையில், இவர் இதே போன்ற வேறு சில திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள நபர் மீது இன்று (ஆகஸ்ட் 13) நீதிமன்றத்தில் ‘வீடு போவது திருடுதல்’ பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட உள்ளது.

அந்த நபர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

சிங்கப்பூர் காவல் துறையினர் பொதுமக்களிடமும் வணிக நிறுவனங்களிடம் தங்களது வளாகங்களின் பாதுகாப்பை எப்போதும் பலப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.