சுகாதாரத் துறைக்கு முக்கிய அப்டேட்…!! தாய்–சேய் சேவையில் பெரிய மாற்றம்..!!

சுகாதாரத் துறைக்கு முக்கிய அப்டேட்…!! தாய்–சேய் சேவையில் பெரிய மாற்றம்..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரும் இந்தியாவும் தமிழ்நாட்டில் இணைந்து நடத்தும் “மேம்பட்ட தாய், சேய் சுகாதாரச் சேவைகள் திட்டத்தின்” இரண்டாம் கட்டம் நிறைவடைந்துள்ளது.

சிங்கப்பூர் அனைத்துலக அறக்கட்டளை, Singhealth குழுமம் ஆகியவற்றுடன் தமிழ்நாட்டின் பொதுச் சுகாதார, நோய்த்தடுப்பு மருத்துவப் பிரிவும் திட்டத்தில் கைகோத்துள்ளன.

இந்தத் திட்டம் 2015ஆம் ஆண்டு அறிமுகம் கண்டது.

ஆயிரக்கணக்கான அன்னையருக்கும் சிசுக்களுக்கும் மேம்பட்ட பராமரிப்பை வழங்க சுமார் 1,200 சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் பயிற்சி பெற்றனர்.

அதிக ஆபத்துள்ள கர்ப்பங்கள், பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் அவசரச் சிகிச்சைத் தேவைகள் ஆகியவற்றில் இரண்டாம் கட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

தமிழ்நாட்டின் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குத் திட்டம் விரிவாக்கம் கண்டது.

தாய், சேய் இருவருக்குமான சுகாதாரக் கட்டமைப்பை மேலும் சிறந்த நிலைக்குக் கொண்டுசெல்லத் திட்டம் முனைகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK