சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பான் தீவு விரைவுச்சாலையில் (PIE) ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில், ஒருவர் லேசான காயம் அடைந்தார்.
இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிகழ்வு குறித்து டிக்டாக் பயனர் wastishissg நேற்று (13.11.25) வெளியிட்ட காணொளியில், மூன்று கார்களும் இரண்டு லாரிகளும் விபத்தில் சிக்கியிருப்பது காணப்படுகிறது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, நேற்று(13.11.25) மாலை சுமார் 7:45 மணியளவில், சாங்கி நோக்கிச் செல்லும் PIE-யில், தெம்பனிஸ் விரைவுச்சாலை (TPE) வெளியேறுவதற்கு முன்பு விபத்து குறித்த தகவல் கிடைத்ததாக தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்திற்குச் சென்றபோது, ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டிருந்ததாகவும், அவர் மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.