கடைக்காரரை ஏமாற்ற முயன்ற வெளிநாட்டு நபர் சிக்கியது எப்படி..??
சிங்கப்பூர்: ரூ மிங்குலியனில் உள்ள ஒரு கைக்கடிகாரக் கடையில், ஒரு இத்தாலிய நபர் போலி கடிகாரத்தை மாற்றி, மொத்தம் S$16,800 மதிப்புள்ள மூன்று ரோலக்ஸ் கைக்கடிகாரங்களை வாங்க முயன்றார்.
ஆனால் கடை உரிமையாளர் அதை கவனித்து, உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தார்.
மத்திய காவல் நிலைய அதிகாரிகள் விரைவாக விசாரணை நடத்தி, 23 வயதான சந்தேக நபரை அடையாளம் கண்டு, அவர் சாங்கி விமான நிலையம் டெர்மினல் 1-ல் நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது கைது செய்தனர்.
சம்பவம் நடந்த மூன்று மணி நேரத்திற்குள் அவரை பிடித்த போலீசார், அவரிடம் இருந்த மூன்று ரோலக்ஸ் கடிகாரங்களையும் மீட்டனர்.