சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் நார்த் ரயில் நிலையத்தையும் ஜோகூர் பாருவின் புக்கிட் சாகார் ரயில் நிலையத்தையும் இணைத்தும் புதிய ரயில் சேவை வருகிறது. இதற்கான பயண நைட்டிப்பு நேரமானது 5 நிமிடம் மட்டுமே இருக்கும்.
இந்த சேவை இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மசூதாவில் சிங்கப்பூர் மற்றும் ஜோகூர் பாரு இடையே இரு வழிகளிலும் குடிநுழைவு நடைமுறையை செய்வதற்கு பதிலாக புறப்படும் இடத்தில் மட்டும் இந்த சேவை தொடரப்படும் என்று முன்மொழியப்பட்டுள்ளது.
இதனை செயல்படுத்துவதற்கு உட்லண்ட்ஸ் நார்த் ரயில் நிலையத்தில் ஒரு குறிப்பிட்ட சில பகுதிகளில் பணிபுரிவதற்கு மலேசிய குடிநுழைவு ஊழியர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
மலேசியா அதிகாரிகள் சிங்கப்பூரில் பணியமர்த்தப்பட்டிருந்தாலும் சிங்கப்பூர் சட்டத்தின் கீழ் செயல்பட வேண்டும் என்பதை மசோதா வலியுறுத்தியுள்ளது.
எடுத்துக்காட்டாக சிங்கப்பூரில் யாரையும் கைது செய்ய மலேசியா அதிகாரிகளுக்கு அனுமதி கிடையாது என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.