காவல் துறையின் விசாரணையில் , இவர் பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கு பண மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் , வங்கி கணக்கின் தகவல்கள் அனைத்தும் கசிந்துள்ளதாகவும் கூறி அவர்களிடம் அதை சரி செய்ய குறிப்பிட்ட தொகையை தரக்கோரி உள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இதை உண்மையென கருதி இவர்கள் கேட்ட தொகையை அவர்கள் சொல்லும் நபர்களிடம் ஒப்படைத்தும் உள்ளனர்.
பிறகு அவர்களை தொடர்பு கொள்ள நினைக்கும் போதுதான் இவர்கள் ஏமார்ந்ததை உணர்ந்துள்ளனர்.
கடந்த 24 ம் தேதி தங்க வியாபாரி புல்லியன்ஸ்டார் கொடுத்த தகவலின் பேரில் இப்பெண்மணி கைதாகியுள்ளார்.
இப்படி பல்வேறு குற்றங்களை செய்து அதில் கிடைக்கும் பணத்தையும் தங்க கட்டிகளையும் குற்றவியல் குழுவின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் முகம் தெரியாத நபர்களுக்கு மாற்றுவதன் மூலம் மோசடி கும்பலுக்கு இப்பெண் உதவியது அம்பலமாகியுள்ளது.