சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஆடவர்க்கு சிறை தண்டனை…! காரணம் என்ன..?

சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஆடவர்க்கு சிறை தண்டனை...! காரணம் என்ன..?

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு (2025) அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி நடைபெற்ற எஃப் 1 கார்பந்தயத்தை காண சுவீடனில் இருந்து ஒரு ஆடவர் வந்துள்ளார்.


கார்பந்தயம் முடிந்து இரண்டாவது நாள் அவர் ஒரு ஹோட்டலுக்கு மது அருந்திவிட்டு சென்றுள்ளார்.

அந்த ஹோட்டலில் உள்ள உணவகத்தில் பணி புரியும் 47 வயதுடைய பெண்ணிடம் நீச்சல் குளத்திற்கு செல்லும் வழியை கேட்டுள்ளார் .

அந்தப் பெண் நீச்சல் குளத்திற்கு செல்லும் வழியை காட்டியதற்குப் பிறகு அந்தப் பெண்ணின் கன்னத்தில் இந்த ஆடவர் முத்தமிட்டுள்ளார்.

இதுகுறித்து அந்தப் பெண் ஹோட்டல் மேலாளரிடம் புகார் கூறியுள்ளார்.

பின்னர் அதே ஹோட்டலில் உணவகத்தில் பணி புரியும் மற்றொரு 60 வயது பெண்ணை தாண்டிச் செல்லும் பொழுது அவரை அவமரியாதையாக நடத்தியுள்ளார்.

இச்சம்பவம் நடந்தது குறித்து காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டு அன்றே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையின் விசாரணை முடிந்து விடுவிக்கப்பட்ட பின் வேறு ஒரு உணவகத்துக்குச் சென்று 23 வயது உடைய பெண்ணிடம் முன்பு செய்த அதே தவறை செய்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜென் மட்டாயஸ் டிட்லோப்சன் என்ற 58 வயது ஆடவர் மூன்று பெண்களிடம் தான் தவறாக நடந்து கொண்டதை காவல்துறை விசாரணையின் போது ஒப்பு கொண்டுள்ளார்.

குற்றத்தை ஒப்புக்கொண்ட காரணத்தால் அவருக்கு மொத்தம் 5 மாதம் மற்றும் 6 வார சிறை தண்டனையை நேற்று (மார்ச் 16) நீதிமன்றம் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK