சிங்கப்பூரில் மீண்டும் ஒருவருக்கு தூ*கு தண்டனை விதிப்பு.!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் போதை கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மலேசியர் சாமிநாதன் செல்வராஜுக்கு நவம்பர் 27-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என சிங்கப்பூர் சிறைத்துறை அறிவித்துள்ளது. இதனுடன்,இவ்வருடம் சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பன்னிரண்டாக உயரும் என கணிக்கப்படுகிறது.
சாமிநாதன் 2017-இல் சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் எல்லைப் பகுதியில் ஹெராயின் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது அவர் குற்றத்தை மறுத்து, தனக்கு தெரியாமல் மூன்றாம் நபர் கொடுத்ததாக விளக்கமளித்தார்.
சிங்கப்பூர் சிறைத்துறையின் அதிகாரப்பூர்வ கடிதம் மூலம் அவரது குடும்பத்தினருக்கு நவம்பர் 27 காலை Changi Prison-இல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதும், அவரது குடும்பம், நண்பர்கள் மற்றும் மனிதநீதி அமைப்புகள் அவசரமாக மன்னிப்பு கோரி விண்ணப்பித்துள்ளனர்.
சிங்கப்பூர் அரசு, போதை கடத்தலுக்கு எதிராக கடுமையான சட்டம் தான் தங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கான அடிப்படை எனத் தெரிவித்துள்ளது.
அதன்படி மலேசிய குடிமகன் சாமிநாதன் செல்வராஜ் நவம்பர் 27ம் தேதி, அதிகாலை 6:00 மணிக்கு சாங்கி சிறையில் (Changi Prison) தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சிறைத்துறை அறிவிப்பில், நவம்பர் 25 முதல் 26 வரை இரண்டு நாட்களுக்கு சாமிநாதனின் குடும்பத்தினருக்கு சிறையில் அவரை சந்திக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.