ஸ்மார்ட் டிரைவிங் தொழில்நுட்பத்துடன் களமிறங்கும் BMW கார்கள்!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் எதிர்கால ஓட்டுநர் அனுபவத்தை பாதுகாப்பாகவும்,மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் மாற்றும் நோக்கில், உலகின் முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் சொந்த தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் பெருமளவில் முதலீடு செய்து வருகின்றனர்.
செயல்திறன் மேம்பாட்டைத் தாண்டி, ஓட்டுநர் பாதுகாப்பு மற்றும் ஓட்டுநர்–வாகனம் இடையிலான தொடர்பை வலுப்படுத்துவதே இம்முயற்சிகளின் முக்கிய இலக்காக உள்ளது.
எக்ஸ்பெங் மோட்டார்ஸ் உருவாக்கிய மனித உருவ ரோபோக்கள், மனித நடத்தைகளை கற்றுக் கொண்டு பகுப்பாய்வு செய்யும் திறன் கொண்டவை.இதே இயந்திரக் கற்றல் தொழில்நுட்பம், வாகனங்களின் தன்னாட்சி ஓட்டுநர் திறனை மேம்படுத்த ஆட்டோமொபைல் துறையிலும் பயன்படுத்தப்படுகிறது.
இதற்கிடையில், வரவிருக்கும் அனைத்து BMW மாடல்களிலும் புதிய இயக்க முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதிக கணினி சக்தியைக் கொண்ட இந்த அமைப்பு, பாதுகாப்பு அம்சங்கள், ஓட்டுநர் உதவி தொழில்நுட்பங்கள் மற்றும் ஓட்டுநர்–வாகன ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
BYD நிறுவனமும் தனது சொந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சென்சார்கள்,மென்பொருள் மற்றும் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைத்து வாகனத்தைச் சுற்றிய 360 டிகிரி சுற்றுச்சூழல் கண்காணிப்பு அமைப்பை உருவாக்கியுள்ளது.
மின்சார வாகனங்களில் நுகர்வோரின் எதிர்பார்ப்புகள் பாதுகாப்பு மற்றும் புத்திசாலித்தனத்தைக் குறிவைத்து மாறி வருகின்றன என்றும் நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.
இதன் மூலம், கார் பிராண்டுகளுக்கிடையிலான போட்டி இனி இயந்திர குதிரைத்திறனில் அல்ல. அறிவார்ந்த தொழில்நுட்ப திறன்களில் நடைபெறுகிறது என்பதே தொழில்துறை நிபுணர்களின் கருத்தாக உள்ளது.