சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு மாலை 6.20 மணிக்கு தகவல் கிடைத்ததும், அவர்கள் தண்ணீர் பீரங்கிகள் மற்றும் தீயணைப்பு குழாய்கள் மூலம் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
தீயால் சமையலறையில் இருந்த பல பொருட்கள் சேதமடைந்தன.
இந்த தீயணைப்பு பணியின் போது, ஒரு குடிமைத் தற்காப்பு அதிகாரி சோர்வாகவும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக உணர்ந்தார்.
சம்பவ இடத்திலேயே இருந்த துணை மருத்துவர்கள் அவரை பரிசோதித்தனர்.
பின்னர் அவர் சிகிச்சைக்காக இங் டெங் ஃபாங் பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
மருத்துவ பரிசோதனைகளுக்குப்பின் அவர் வீடுக்கு அனுப்பப்பட்டதுடன், மூன்று நாட்கள் மருத்துவ விடுப்பும் வழங்கப்பட்டது.
இச்சம்பவத்தையடுத்து, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதில், சமையலறையில் அடுப்புகளை பயன்படுத்தும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும், பயன்படுத்தப்படாதபோது எரிவாயு மற்றும் மின்சார இணைப்புகளை அணைத்து வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.