பேருந்து பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி...!!!
👉 என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்...!!
சிங்கப்பூர்: சிங்கப்பூர் SMRT நிறுவனம், தரைவழி சோதனைச் சாவடிகளில் ஏற்படும் அதிகாலை நெரிசலைக் குறைப்பதற்காக, ஜோகூர் பாரு சோதனைச் சாவடியிலிருந்து புறப்படும் எல்லை தாண்டிய பேருந்து வழித்தடம் 950 இன் முதல் பேருந்து இந்த மாதம் 15 ஆம் தேதி முதல் காலை 4:50 மணிக்கு (முன்னதாக 10 நிமிடங்கள்) புறப்படும் என அறிவித்துள்ளது.
திங்கள் முதல் வெள்ளி வரை அமல்படுத்தப்படும் இந்த மாற்றத்துடன், ஜோகூர் பாருவிலிருந்து இயக்கப்படும் 160,170 மற்றும் 170X பேருந்துகளின் சேவைகளும் இந்த மாதம் 15 ஆம் தேதியிலிருந்து அதிகாலை 4:50 மணிக்கு துவங்கும்.
தற்போது, SMRT மற்றும் SBS டிரான்சிட் நிறுவனங்களின் நான்கு எல்லை தாண்டும் பேருந்துகள் அதிகாலை 5 மணிக்கு சேவையைத் தொடங்குகின்றன.
இதற்குமுன், மலேசியா அரசு இந்த ஆண்டு ஜூன் மாதத்தில்,சிங்கப்பூர்-மலேசியா தரைவழி சோதனைச் சாவடிகளில் நெரிசலை குறைக்க, எல்லை தாண்டும் பேருந்து சேவைகள் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக, அதிகாலை 4 மணிக்கே துவங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தது.