மூன்று ஆலைகளில் ஒன்று 2031-க்குள் தயாராகும், மற்ற 2 ஆலைகள் 2032-குள் தயாராகவும் EMA திட்டமிட்டுள்ளது.
வரவிருக்கும் இந்த புதிய ஆலைகள் குறைந்தது 600 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அளவில் அமைக்கப்படும் என்று EMA தெரிவித்துள்ளது. 8,64,000 – க்கும் அதிகமான வீடுகளுக்கு ஓராண்டுக்கு தேவையான மின்சாரம் தான் இந்த 600 மெகாவாட் மின்சாரம்.
ஹைட்ரஜன் வாயு வருங்காலத்தில் எளிதில் பயன்படுத்தக்கூடிய நிலை வரும் போது ஆலைகள் கையாளும் இயற்கை எரிவாயில் குறைந்தது 30% அளவு ஹைட்ரஜன் ஆக இருக்க வேண்டும். எரிக்கப்படும்போது ஹைட்ரஜன் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் கரியமில வாயுவை வெளியேற்றாது. அதே வேளையில் ஹைட்ரஜன் ஒரு இயற்கை எரிவாயு புதைபடிம எரிபொருள் ஆகும்.
தொழில்துறை, மின்னிலக்கத்துறை ஆகியவற்றில் மின்சாரத்திற்கான தேவை அதிகமாக இருப்பதன் காரணமாக இந்த முடிவை எடுத்து உள்ளதாக EMA தெரிவித்துள்ளது.
இந்த ஆலைகளுக்கான திட்ட முன்மொழிவுகள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என எரிசக்தி நிறுவனங்களுக்கு EMA அறிவுறுத்தியுள்ளது.
தற்போது உள்ள ஆலைகளுடன் இணைந்து சிங்கப்பூருக்கு ஒரு நிலையான அடிப்படை மின்சார விநியோகத்தை வழங்குவதோடு, தூய்மையான எரிசக்தியை வழங்கவும் இந்த திட்டமானது ஆதரவளிக்கும் என EMA நம்புகிறது.