இந்தியாவில் அதிகரிக்கும் வெப்ப அலை..!! 50 டிகிரியை தொடும் அபாயம்..!!

இந்தியாவில் அதிகரிக்கும் வெப்ப அலை..!! 50 டிகிரியை தொடும் அபாயம்..!!

வெப்பத்தால் கொதிக்கும் நகரம்
உத்தர பிரதேசத்தின் பண்டா நகரம் தற்போது இந்தியாவின் மிக அதிக வெப்பமான பகுதிகளில் ஒன்றாக மாறியுள்ளது.

கடந்த சில நாட்களாக அங்கு 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை பதிவாகி, மக்கள் இயல்பு வாழ்க்கையே முடங்கும் நிலை உருவாகியுள்ளது.
காலை 10 மணிக்குப் பிறகு சாலைகளில் யாரையும் பார்க்க முடியாத நிலை அங்கு ஏற்பட்டிருக்கிறது.

பல தொழிலாளர்கள் தங்கள் வருமானத்தின் 40 சதவீதம் வரை இழக்க நேரிட்டாலும், பகல் வேலையை தவிர்க்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த கடும் வெப்பத்திற்குக் காரணம் வெறும் கோடைகாலம் மட்டும் அல்ல என்று சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

மரங்களை அழித்தது, சட்டவிரோத மண் கடத்தல், காடுகளை அழித்தல், கல் குவாரி வெடிப்புக்கள் போன்றவை அந்தப் பகுதியின் இயற்கை சமநிலையை கடுமையாக பாதித்துள்ளது.

இதனால் நிலத்தடி நீர் குறைந்து, நதிகள் வறட்சியாகி, மண் ஈரப்பதம் குறைந்து… கோடையை மேலும் கொடுமையாக்கி இருக்கிறது.

பகலில் மட்டுமல்ல, இரவிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. காலநிலை மாற்றம் என்பது இனி எதிர்கால பிரச்சினை அல்ல, தற்போதைய நிஜம் என்பதை பண்டாவின் நிலை மீண்டும் நினைவூட்டுகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK