சிங்கப்பூர் - கம்போடியா புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம்..!!
சிங்கப்பூரின் நிலையான வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் பூவும் கம்போடியாவின் வர்த்தக அமைச்சர் சான் நிம்மும் இணைந்து இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று (ஏப்ரல் 10) கையெழுத்திட்டனர்.
திறந்த வர்த்தகத்தின் மூலம் உணவு பாதுகாப்பையும் இருதரப்பினருக்கும் அரிசி வர்த்தகத்தையும் வலுப்படுத்துவதற்கும் தேவையற்ற வர்த்தக கட்டுப்பாடுகளை தவிர்ப்பதற்காகவும் சிங்கப்பூர் மற்றும் கம்போடியா ஆகிய இரு நாடுகளின் உறுதிபாட்டை மீண்டும் இன்று கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் உறுதிப்படுத்தி உள்ளது.
இது குறித்த செய்தியை நிலையான வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் என்று அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலமாக கம்போடிய அரசாங்கத்தின் கோரிக்கையின் பெயரில் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு கம்போடிய அரசாங்கம் அரிசியை விற்பனை செய்ய உள்ளது.
தற்போது தொடர்ச்சியாக நிலவி வருகின்ற பதட்ட நிலை காரணமாக உலக உணவு விநியோகத்தில் தடைகள் ஏற்படும் அபாயம் அதிகமாகியுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது இருதரப்பினருக்கும் நன்மை தரும் ஒரு சூழலாக அமைந்திருக்கிறது.
இதன் மூலமாக இருதரப்பு உணவு வர்த்தகம் மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் மேலும் நெருங்கிய ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது என ஃபு ஹையான் குறிப்பிட்டு இருக்கிறார்.
வியட்நாம் மற்றும் தாய்லாந்துடன் ஆன ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டத்தை தொடர்ந்து சிங்கப்பூர் மற்றொரு நாட்டுடன் கையெழுத்திடும் மூன்றாவது ஒப்பந்தமாக கருதப்படுகிறது. இடையூறுகளின் போது தடையற்ற உணவு விநியோகத்தை உறுதி செய்வதன் நோக்கமாக சிங்கப்பூரின் ‘உணவு கதை 2.0’ இன் உலகளாவிய கூட்டான்மை தோன்றின் கீழ் இது ஒரு முக்கிய முன்னெடுப்பாக அமைந்துள்ளது.
தனது உணவு விநியோகத்தின் மேல் திறனை மேம்படுத்தும் விதமாக ஒத்த எண்ணம் கொண்ட பொருளாதாரங்களுடன் பரஸ்பர முறையில் நன்மை பயக்கும் விதமாக ஒப்பந்தங்களை சிங்கப்பூர் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.