பொங்கோல் HDB குடியிருப்பில் இருவர் மரணம்..!! விசாரணை தீவிரம்..!!

பொங்கோல் HDB குடியிருப்பில் இருவர் மரணம்..!! விசாரணை தீவிரம்..!!

சிங்கப்பூர்: பொங்கோல் பகுதியில் உள்ள ஒரு கழக வீட்டில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் நார்த்ஷோர் டிரைவில்பகுதியில் அமைந்துள்ள புளோக் 408B-ல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து இன்று காலை சுமார் 6.25 மணியளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறை உறுதிப்படுத்தியது.

சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள், 71 வயதான ஆண் மற்றும் 66 வயதான பெண் இருவரையும் சுயநினைவின்றி கிடந்த நிலையில் கண்டறிந்தனர்.

மருத்துவ பரிசோதனையில் அவர்கள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பான ஆரம்பக்கட்ட தகவல்களின் அடிப்படையில், இந்த மரணம் “இயற்கைக்கு மாறானது” என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தின் பின்னணி மற்றும் காரணங்களை கண்டறிய காவல்துறை தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK