சிங்கப்பூர் கால்வாயில் 57 வயது நபர்..! அடுத்து நடந்தது என்ன..?

சிங்கப்பூர் கால்வாயில் 57 வயது நபர்..! அடுத்து நடந்தது என்ன..?

சிங்கப்பூரின் Bukit Timah Canal பகுதியில் நீரில் மிதந்த நிலையில் 57 வயது ஆண் ஒருவர் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் ஆகஸ்ட் 23ஆம் தேதி இரவு சுமார் 7.25 மணியளவில் நடந்தது. Bukit Timah Canal பகுதியில் ஒருவருக்கு உதவி தேவைப்படுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

தகவல் கிடைத்ததும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் (SCDF) சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு ஒருவர் கால்வாய் நீரில் சுயநினைவின்றி மிதந்து கொண்டிருந்ததை அவர்கள் கண்டனர்.

இதையடுத்து, மீட்புப் படையினர் ஏணி மூலம் கால்வாய்க்குள் இறங்கி, அந்த நபரை நீரிலிருந்து மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர் SCDF ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக டான் டாக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் அந்த 57 வயது நபர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சம்பவம் தொடர்பாக ஆரம்பக்கட்ட விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இதில் கொலைக்கான சாத்தியம் இல்லை என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும், சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சம்பவம் நடைபெற்ற நேரத்தில் அருகிலுள்ள Stevens Road பகுதியில் நீல நிற கூடாரம் அமைக்கப்பட்டிருந்ததாகவும், அங்கு காவல்துறையினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியதாகவும் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியான காணொளிகள் மூலம் தகவல் கிடைத்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான முழுமையான காரணம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த 57 வயது நபர் குறித்த கூடுதல் விவரங்களும் விசாரணையின் முடிவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.