புரோப்நெக்ஸ் ரியல்டிக்கு எதிரான முறைகேடு வழக்கு வாபஸ்..!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் முறைகேடான நடத்தை தொடர்பாக, புரோப்நெக்ஸ் கிளை நிறுவனமான புரோப்நெக்ஸ் ரியல்டி மற்றும் அதன் இணை எதிர்வாதிகள் இருவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு கைவிடப்பட்டுள்ளதாக அந்த சொத்துச் சந்தைச் சேவை குழுமம் தெரிவித்துள்ளது.
பங்குச் சந்தைக்கான நிதி அறிக்கையின் மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டதாகவும், கடந்த ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக புரோப்நெக்ஸ் முன்பே தெரிவித்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
அந்நிறுவனத்தைச் சேர்ந்த விற்பனையாளர் ஒருவரின் அறிவுரையால் ஏற்பட்ட பாதிப்புக்காக இழப்பீடு கோரி அந்த வழக்கு தொடரப்பட்ட நிலையில், அதை எதிர்கொண்டு தன்னைத் தற்காத்துக்கொள்ள நிறுவனம் நீதிமன்றத்தை அணுகியதாகவும், தற்போது வழக்குத் தொடர்ந்தவரே அந்த வழக்கை கைவிட்டுள்ளதாகவும் புரோப்நெக்ஸ் தெரிவித்துள்ளது.
இருப்பினும், வழக்குப் பற்றிய மேலதிக விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த வழக்கால் குழுமத்திற்கு குறிப்பிடத்தக்க பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும், அதன் பணித்தர மதிப்பீட்டு நிதியாண்டு 2025 டிசம்பர் 31ல் நிறைவடைந்ததாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, அக்டோபர் 2025ல், புரோப்நெக்ஸ் ரியல்ட்டிக்கு எதிராக 849,287 டாலர் மதிப்பிலான மற்றொரு வழக்கும் கைவிடப்பட்டதாகவும், அந்த வழக்கில் ‘99-to-1’ முறையை பயன்படுத்தி சொத்து வாங்கி கூடுதல் வாடிக்கையாளர் முத்திரை வரி (ABSD) குறைக்க முயன்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.