சிங்கப்பூரில் நடந்த மோசடி..!! 231 பேரிடம் விசாரணை..!!

சிங்கப்பூரில் நடந்த மோசடி..!! 231 பேரிடம் விசாரணை..!!

சிங்கப்பூரில் இணைய வர்த்தக மோசடிகள், ஆள் மாறாட்ட மோசடிகள், வேலை மோசடிகள், வாடகை மோசடிகள் போன்றவற்றில் 231 பேர் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மோசடியில் $6.35 ஏமாற்றியுள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை 231 பேரிடம் சந்தேகித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களில் 165 பேர் ஆண்களும் 66 பெண்களும் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

14 வயதிற்கும் 84 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து கடந்த மாதம் 30ஆம் தேதிக்கும் இந்த மாதம் 12ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி கண்டுபிடித்துள்ளனர்.

ஏமாற்றம் செய்தது கள்ள பணத்தை நல்ல பணமாக்கியது உரிமம் இன்றி கட்டணச் சேவை வழங்கியது போன்ற குற்றத்திற்காக சந்தேகப்பட்ட நபர்களை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் குற்றவியல் சட்டப்பிரிவு 420 இன் கீழ் மற்றவர்களை ஏமாற்றிய குற்றத்திற்காக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK