தனது விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த Air Asia விமானம்!
தனது விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த Air Asia விமானம்!
மலேசியாவில் இருந்து தென்கொரியாவின் இன்ச்சியோன் நகருக்கு ஏர் ஏஷியா விமானம் கிளம்பியது.
விமானம் தரை இறங்கிய பிறகு விமானத்தில் இருந்த பயணிகள் தாங்கள் வந்தடைய வேண்டிய நகரத்திற்கு வந்து விட்டதாக நினைத்து தங்களது உடைமைகளை எடுக்க தயாரானார்கள்.
ஆனால் ஏர் ஏஷியா விமானம் தரையிறங்கியதோ அங்கிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிம்போ என்ற நகரில்.
இது குறித்து பயணிகளுக்கு எந்த தகவலும் அளிக்கப்படவில்லை.
தரை இறங்க வேண்டிய விமான நிலையத்தில் அதிக விமானங்கள் வந்ததாலும் வானிலை மோசமாக இருந்ததாலும் அது திருப்பி விடப்பட்டு இந்த இடத்தில் தரையிறக்கப்பட்டு இருந்தது.